முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா வேள்வி சாம்பலும் தீர்த்தமும் தீர்த்து வைத்த நோய்

சக்தி. A. நல்லம்மாள், ஆத்தூர். அருள்திரு அம்மா எங்கள் குடும்பத்தில் நடத்தித் தந்த சித்துக்கள் பற்பல. நம் மருவத்தூர் தாய், எங்கள் மீது மட்டுமல்ல, விவசாயத்தின் மீதும் காட்டிய கருணைக்கு எல்லையே இல்லை.       விபரம் என்னவென்றால் பப்பாளி தோட்டத்தில் வைரஸ் நோய் தாக்கி இலைகள் சுருண்டு விட்டன. நாங்களும் பூச்சி மருந்துகள் அடித்தும் நோய் தெளியவில்லை. என் கணவர் இது தேறாது அழித்து விடலாம் என்று சொன்னார்.      அம்மாவின் கலச விளக்கு வேள்வி பூசையின் சாம்பலையும், தீர்த்தத்தையும் தெளித்து அம்மா உன் அருளால் வைரஸ் நோய் நீங்கி விடவும், நன்கு காய் காய்த்து பழம் தர வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டேன். அவ்வாறே அம்மா எங்கள் வேண்டுதலை ஏற்று அருள் புரிந்தார்கள். இப்பொழுது எங்கள் கடனைக் கட்டும் அளவுக்கு பலன் தருகிறாள். மருவத்தூர் அம்மாவிற்கு கோடானா கோடி நன்றி.