முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அருள் திரு அம்மாவின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு!

                                                       ஓம் சக்தி. அருள் திரு அம்மாவின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு!  பேராசிரியர் சோமசுந்தரம், பூம்புகார் .  "அடிகளாரின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு" என்பது அன்னையின் அருள்வாக்கு.                   அன்னையின் அருள்வாக்குகள் உபதேச வார்த்தைகள் மட்டும் அல்ல; உண்மை  வார்த்தைகள். உளமாரத் தொண்டும் உண்மையான பக்தியும் கொண்டு தொண்டு செய்கின்ற பக்தர்களுக்கு அனுபவ வார்த்தைகளாக மலரும் மகா வாக்கியங்கள் அவை. உபநிடதங்கள் சொல்லும் உயர்வான வார்த்தைகள்தான் மகாவாக்கியங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை வடமொழியில் உள்ள வாக்கியங்கள். தமிழில் மருவத்தூர் அம்மா சொல்லும் அருள்வாக்குகள் எல்ல்லாம் உபநிடதங்களுக்கு மேலான உன்னதமான மகாவாக்கியங்கள். அர்த்தங்களை மட்டும் கொண்டிராமல் அனுபவமாக மலரும் மகாவாக்கியங்கள்.                           அப்படிப்பட்ட மகவாக்கியங்களில் ஒன்றுதான் "அடிகளார் பாதத்துக்கும், பாதம் பட்ட மண்ணுக்கும் மகிமை உண்டு மகனே!" என்னும் மகா அருள்வாக்கு. அனுபவம் ஒன்றால் அதை, நிகழ்த்திக் காட்டிய அதிசயம் ஒன்றைப் பார்ப்போம்!.