முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Maruvoor Chinnavar

இருமுடி பற்றிய அன்னையின் அருள்வாக்கு:

இருமுடி பற்றிய அன்னையின் அருள்வாக்கு : “ அன்னையை மனமுருக நினைத்து தன் குறைகளுக்காக வேண்டி சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து மேல்மருவத்தூர் ஆலயம் வலம் வந்து அன்னையை சரணடைந்தால் நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும் .” “ நான் கூறும் விதிமுறைப்படி உண்மையாக விரதமிருந்து இருமுடி ஏந்தி வரும் சக்திகளை அழிவிலிருந்து காப்பாற்றுவேன் .” “ இருமுடி அணிந்தால் உங்களுக்கெதிரான மாந்திரிகம் அழியும் .” “ ஐம்புலன்களை அடக்கத்தான் விரதம் . விரதம் இருந்தால்தான் நோய்வராது . உடலில் சேர்கிற அழுக்கைக் குளித்துப் போக்கிக் கொள்வது போல , துருபிடித்த பொருட்களை எண்ணெய் கொண்டு சுத்தப்படுத்துவது போல , உள்ளத்தில் ஏற்படும் அழுக்குகளை நீக்கி கொண்டு தூய்மையாக வாழ்வதற்கு விரதங்கள் உதவும் .” “ ஒழுக்கமில்லாமல் , கட்டுப்பாடின்றி நீ கொண்டு வந்து செலுத்தும் இருமுடியினால் பயன் என்ன ? விரதமிருந்து கட்டுப்பாட்டை மேற்கொண்டு இருமுடி ஏந்தி வருகின்ற சிலருக்குக் காட்சி கொடுப்பேன் . அந்தக் காட்சி பெற்றவர்களுக்கு மறுபிறவி இல்லை .”

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு ,