முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருமுடி பற்றிய அன்னையின் அருள்வாக்கு:


இருமுடி பற்றிய அன்னையின் அருள்வாக்கு:
அன்னையை மனமுருக நினைத்து தன் குறைகளுக்காக வேண்டி சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து மேல்மருவத்தூர் ஆலயம் வலம் வந்து அன்னையை சரணடைந்தால் நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும்.”
நான் கூறும் விதிமுறைப்படி உண்மையாக விரதமிருந்து இருமுடி ஏந்தி வரும் சக்திகளை அழிவிலிருந்து காப்பாற்றுவேன்.”
இருமுடி அணிந்தால் உங்களுக்கெதிரான மாந்திரிகம் அழியும்.”
ஐம்புலன்களை அடக்கத்தான் விரதம். விரதம் இருந்தால்தான் நோய்வராது. உடலில் சேர்கிற அழுக்கைக் குளித்துப் போக்கிக் கொள்வது போல, துருபிடித்த பொருட்களை எண்ணெய் கொண்டு சுத்தப்படுத்துவது போல, உள்ளத்தில் ஏற்படும் அழுக்குகளை நீக்கி கொண்டு தூய்மையாக வாழ்வதற்கு விரதங்கள் உதவும்.”
ஒழுக்கமில்லாமல், கட்டுப்பாடின்றி நீ கொண்டு வந்து செலுத்தும் இருமுடியினால் பயன் என்ன? விரதமிருந்து கட்டுப்பாட்டை மேற்கொண்டு இருமுடி ஏந்தி வருகின்ற சிலருக்குக் காட்சி கொடுப்பேன். அந்தக் காட்சி பெற்றவர்களுக்கு மறுபிறவி இல்லை.”
தொடர்ந்து இருமுடி செலுத்து! ஒன்பது மாலை போதும்! பத்து மாலை போதும்! என்று நிறுத்திக் கொள்ளாதே! நீ செலுத்தும் ஒவ்வொரு இருமுடிக்கும் கட்டாயம் பலன் உண்டு.”
எங்கெங்கே அதிக அளவில் சக்தி மாலை அணிந்து இங்கு வந்து இருமுடி செலுத்துகிறார்களோ அங்கே அழிவுகள் அதிகம் இருக்காது.”
சக்திமாலைஇருமுடியும், சக்திவிரதமும்.
*****************************************
அன்னையை மனமுருக நினைத்து, தன் குறைகளுக்காக வேண்டி, சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து, மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தினை வலம் வந்து அன்னையிடம் சரணடைந்தால், நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும்
சக்திமாலை அணியும் பொழுது ஒரு நிமிடமாவது தன்னை மறந்து சந்தோசமாக இருக்க வேண்டும்.”
பிறந்ததிலிருந்து இன்றுவரை கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும்.”
கருவறை முன்பு அபிடேகம் செய்யும் போது அரை நிமிடமாவது மனதை ஒருமுகப் படுத்தினால் கூட இந்த முறை இருமுடி அணிந்த பலனைத் தருகிறேன்.”
- சக்திமாலை குறித்த அன்னையின் அருள்வாக்குகள்.
சக்தி மாலை:
சக்தி மாலையைச் சிறு பிள்ளைகள் உட்பட ஆண், பெண் அனைவரும் வயது வரம்பு இன்றி அணியலாம். சக்திமாலையை அணிந்து பக்தர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே ஐந்து அல்லது மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டு மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தினை அடைய வேண்டும்.
சக்திமாலை அணிபவர்கள் தங்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திலோ/சக்திபீடத்திலோ அல்லது தாங்கள் சார்ந்துள்ள மன்றத்திலோ/ சக்திபீடத்திலோ தான் மாலை அணிய வேண்டும்.
சக்திமாலை, இருமுடிப் பை, டாலர் அகியவற்றினைச் சித்தர் பீடத்திலிருந்தோ அல்லது சித்தர் பீடத்திலிருந்து வாங்கி வைத்திருக்கும் மன்றங்கள் / சக்திபீடங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
சக்திமாலை அணிந்தவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது முதலில்ஓம்சக்திஎன்று சொல்லுதல் வேண்டும்.
சக்திமாலை அணிந்து விரதமிருந்து சித்தர் பீடம் வந்து திரும்பப் பெண்களுக்கு மாதவிலக்கு ஒரு தடையல்ல.
சக்திமாலை அணிந்திருக்கும் காலங்களில், உறவினர், பங்காளிகள் வீட்டில் அசம்பாவித காரியங்கள் ஏற்படுமானால் தீட்டு எனக்கருதி மாலையை கழற்றத் தேவையில்லை. மாலையுடனேயே மேற்படிக் காரியங்களில் பங்கேற்று தொண்டாற்றலாம்.
மாலை அணிபவர்கள் (பணிக்கு செல்பவர்கள் உட்பட) ஒன்பது முறைகளுக்கு மேல் மாலை அணிபவர்கள் மஞ்சள் நிற உடைகளும் மற்றவர்கள் சிவப்பு நிற உடைகளும் மட்டுமே அணிய வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு ,

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை

     திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அட்சரங்களில் நான் அகரமாக உள்ளேன் என்றான் கீதையில் கண்ணன். அ என்று எழுத்துடன் வருவது அம்மா. உலகத்தில்  கெட்டா அப்பா உண்டு. கெட்ட அம்மா கிடையாது. குடும்பத்தில் உள்ள வேதனைகளையும், சோதனைகளையும் அம்மாதான் சுமக்கிறாள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய் என்பது  பழமொழி. மனிக உறவிலேயே தாய்தான் தெய்வ அன்பு காட்டுகிறாள்.  அந்த த் தாயினும் தாயாய் உயிர்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி..... திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்னும் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் பொருளை அனுபவத்தில் அன்னை ஆதிபராசக்தி எனக்குப் புரிய வைத்தாள். எனக்குத் தரிந்த குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது... சென்னை மாம்பலத்தில் ஒரு குடும்பம். நாயுடு வகுப்பைச் சேர்ந்த குடும்பம் அது.       கணவன், மனைவி, 3 பெண்கள் கொண்ட குடும்பம் அது .  ராயப்பேட்டையில்  தபால் நிலையத்தில் தபால்கார ர்கள் விடுமுறையில் சென்றால் அந்த இடத்தில் போய் வேலை செய்வார் அந்த அன்பர்.. தொட்டுக் கொள்ள துடைத்துக்கொள்ள என்ற அளவில் மட்டும் பொருளாதார  வசதி.   ஏதோ அவர்கள் வாழ்க்கை வண்டி மெதுவாக ந