முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அண்ணாமலையே போற்றி!

  மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ளது ‘போற்றித் திருஅகவல்’. இதைச் சொல்லி, ஒவ்வொரு ‘போற்றி’க்கும் மலர் தூவி, சிவபெருமானை வழிபடலாம். கோயில்களில் வலம் வரும்போதோ, கிரிவலம் செய்யும்போதோ பிரதோஷ வழிபாட்டின் போதோ இந்த போற்றித் திரு அகவலைச் சொல்லி, சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம்! திருநாளன்று அண்ணாமலையைக் கிரிவலம் வரும்போதும் வீட்டில் வழிபடும்போதும் துதிக்கும் வகையில் போற்றித் திருஅகவலில் உள்ள நாமப் போற்றிகள் தொகுப்பு உங்களுக்காக! ‘போற்றித் திருஅகவல்’ தாயே யாகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதிய னாகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றி தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக் காரமு தானாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின்ஆர் உருவ விகிர்தா போற்றி கல்நார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா என்றனக் கருளாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரைசே போற்றி அமுதே போற்றி விரைசேர் சரண விகிர்தா போற்றி
சமீபத்திய இடுகைகள்

ஆதிகாஞ்சி அண்ணாமலை!

  உ லகிலேயே மிகப்பழைமையான மலைகளில் திருவண்ணா மலையும் ஒன்று. இதன் வயது 260 கோடி ஆண்டுகள் என்பர். கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், இந்தக் கலி யுகத்தில் மருந்து மலையாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை என்கின்றன புராணங்கள். இது `ஆர்க்கேயன்’ காலத்து மலை என்றும், இது முன்னர் எரிமலையாக இருந்து பின்னர் குளிர்ந்தது என்றும் சொல்வர். அ ண்ணுதல்- நெருங்குதல்; அண்ணா- நெருங்க முடியாதது என்று பொருள். திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத மலை என்பதால் அண்ணா மலை. ‘திரு’ எனும் மரியாதை சேர்த்து திருஅண்ணாமலை என்பதே சரி. அ ருணாசலபுரக் கதையை குத்சர், உரோமசர், குமுதர், குமுதாட்சர், சகடாயர், அகத்தியர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக் ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தி தேவரும், மார்க்கண்டேய ரும் கூறியுள்ளனர். உ லகஅளவில் உள்ள எல்லா சிவன் கோயில்களிலும்,கருவறையின் பின்புறம் ‘லிங்கோத்பவர்’ இடம் பெற்றிருப்பார். அவர் தோன்றிய இடம்-திருவண்ணாமலை. பி ருங்கி முனிவர் இழ

வேதாளங்களுக்கு அருளிய வடிவேலன்

 ஒரு அரசன் தான் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்கு பல்வேறு நிலையிலுள்ள அரசவை ஊழியர்களை வைத்திருப்பார். அதுபோல இறைவனின் கட்டளையை ஏற்று அதை நிறைவேற்றுவதற்கும் சில சக்திகள் உண்டு. இவ்வாறு ஈசனின் கட்டளையை ஏற்று அவற்றை ஈசனின் அருளுடன் நொடிப் பொழுதில் நிறைவேற்றுபவை பூதகணங்களே. ஒரு ஜீவன் கயிலைக்கு செல்லும்போது கூட உடன் வந்து அழைத்துச் செல்பவை சிவகணங்களே. ஈசனின் கட்டளைப்படி சம்பந்தருக்கு திருவாவடுதுறை தலத்தில் உலவாப் பொற்கிழியையும், பட்டீஸ்வரம் எனும் தலத்தில் முத்துச் சிவிகையையும் கொண்டு வந்து கொடுத்தவை பூத வேதாள கணங்களேயாம். திருமுருகன்பூண்டியில் சிவபெருமானின் கட்டளைப்படி வேடர்களாக வந்து சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளிடம் திருவிளையாடல் நடத்தியவையும் பூத வேதாளங்களே ஆகும். அப்படிப்பட்ட பூத வேதாள கணங்கள் வணங்கும் தலமே செய்யூர் ஆகும். இத்தலத்தைக் குறித்து அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில் வேதாள கணம் புகழ் வேலவன் என்று போற்றிப் பாடுகிறார். இங்குள்ள ஆலயத்தை கந்தசுவாமி பைரவர் கோயில் என்றே அழைக்கிறார்கள். மேலும் வேறெங்கும் காணக் கிடைக்காத அரிதாக 27 நட்சத்திரங்களுக்குரிய 27 பூத வேதாளங்கள் முருகனை வணங்கும்

சக்தி விரதம் ஏன்?

 சக்தி விரதம் ஏன்?     "ஐம்புலன்களை அடக்கத்தான் விரதம். விரதம் இருந்தால் தான் நோய் வராது. உடலில் சேர்கிற அழுக்கைக் குளித்துப் போக்கிக் கொள்வது போல், துருப்பிடித்த பொருட்களை எண்ணெய் கொண்டு சுத்தப்படுத்துவது போல், உள்ளத்தில் ஏற்படும் அழுக்குகளை நீக்கிக் கொண்டு தூய்மையான வாழ்வு வாழ்வதற்கு விரதங்கள் உதவும்." வசதி படைத்தவர்கட்கு - மன்றங்கட்கு:     "ஏழைச் சிறுவர் 5 பேர்; சிறுமியர் 5 பேருக்கு இருமுடி போட்டு அழைத்து வந்தால் பலன் உண்டு. அனாதைக் குழந்தைகளையும் அணைக்க வேண்டும் என்பதற்காகப் பத்து பேருக்கு மாலை போட்டு அழைத்து வரும்படிச் சொல்கிறேன். அவர்களுடன் இருந்து செய்தால் பெருமை! பெருமை பணத்தால் இல்லை. அன்பாலும் தொண்டாலும் வருகிற பெருமையே பெருமை! அவற்றுக்குத்தான் பலன் உண்டு." மாந்திரீகம் அழியும்     "இருமுடி அணிந்தால் உங்களுக்கு எதிரான மாந்தீரீகம் அழியும்." ஏழைக்கு இருமுடி     "எத்தனை ஏழைக்கு இருமுடி அணிய வைத்து அழைத்துக் கொண்டு வருகிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு உனக்குப் பலன் உண்டு." ஒன்பதுடன் நிறுத்திக் கொள்ளாதே     "தொடர்ந்து இருமுடி செலுத்து! ஒன்பது ம

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து