முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அண்ணாமலையே போற்றி!

 மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ளது ‘போற்றித் திருஅகவல்’. இதைச் சொல்லி, ஒவ்வொரு ‘போற்றி’க்கும் மலர் தூவி, சிவபெருமானை வழிபடலாம். கோயில்களில் வலம் வரும்போதோ, கிரிவலம் செய்யும்போதோ பிரதோஷ வழிபாட்டின் போதோ இந்த போற்றித் திரு அகவலைச் சொல்லி, சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம்!

திருநாளன்று அண்ணாமலையைக் கிரிவலம் வரும்போதும் வீட்டில் வழிபடும்போதும் துதிக்கும் வகையில் போற்றித் திருஅகவலில் உள்ள நாமப் போற்றிகள் தொகுப்பு உங்களுக்காக!

‘போற்றித் திருஅகவல்’

தாயே யாகி வளர்த்தனை போற்றி

மெய்தரு வேதிய னாகி வினைகெடக்

கைதர வல்ல கடவுள் போற்றி

ஆடக மதுரை அரசே போற்றி

கூடல் இலங்கு குருமணி போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக் காரமு தானாய் போற்றி

மூவா நான்மறை முதல்வா போற்றி

சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி

மின்ஆர் உருவ விகிர்தா போற்றி

கல்நார் உரித்த கனியே போற்றி

காவாய் கனகக் குன்றே போற்றி

ஆவா என்றனக் கருளாய் போற்றி

படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி

இடரைக் களையும் எந்தாய் போற்றி

ஈச போற்றி இறைவ போற்றி

தேசப் பளிங்கின் திரளே போற்றி

அரைசே போற்றி அமுதே போற்றி

விரைசேர் சரண விகிர்தா போற்றி

வேதி போற்றி விமலா போற்றி

ஆதி போற்றி அறிவே போற்றி

கதியே போற்றி கனியே போற்றி

நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி

உடையாய் போற்றி உணர்வே போற்றி

கடையேன் அடிமை கண்டாய் போற்றி

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

குறியே போற்றி குணமே போற்றி

நெறியே போற்றி நினைவே போற்றி

வானோர்க் கரிய மருந்தே போற்றி

ஏனோர்க் கெளிய இறைவா போற்றி

மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை

ஆழா மேயரு ளரசே போற்றி

தோழா போற்றி துணைவா போற்றி

வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி

முத்தா போற்றி முதல்வா போற்றி

அத்தா போற்றி அரனே போற்றி

உரையுணர் விறந்த வொருவ போற்றி

விரிகட லுலகின் விளைவே போற்றி

அருமையி லெளிய அழகே போற்றி

கருமுகி லாகிய கண்ணே போற்றி

மன்னிய திருவருள் மலையே போற்றி

என்னையு மொருவ னாக்கி யிருங்கழற்

சென்னியில் வைத்த சேவக போற்றி

தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி

அழிவிலா ஆனந்த வாரி போற்றி

அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி

முழுவதும் இறந்த முதல்வா போற்றி

மானேர் நோக்கி மணாளா போற்றி

வானகத் தமரர் தாயே போற்றி

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை யன்றாய் விளைந்தாய் போற்றி

அளிபவ ருள்ளத் தமுதே போற்றி

கனவிலுந் தேவர்க்கு அரியாய் போற்றி

நனவிலும் நாயேற்(கு) அருளினை போற்றி

இடைமரு(து) உரையு மெந்தாய் போற்றி

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீறார் திருவை யாறா போற்றி

அண்ணாமலையே போற்றி!
x

அண்ணா மலையெம் மண்ணல் போற்றி

கண்ணார் அமுதக் கடலே போற்றி

ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி

பாகம் பெண்ணுரு வானாய் போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி

குற்றா லத்தெம் கூத்தா போற்றி

கோகழி மேவிய கோவே போற்றி

ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி

பாங்கார் பழனத் தழகா போற்றி

கடம்பூர் மேவிய விடங்கா போற்றி

அடைந்தவர்க் கருளு மப்பா போற்றி

இத்தி தன்னின் கீழிரு மூவர்க்

கத்திக் கருளிய வரசே போற்றி

தென்னா டுடைய சிவனே போற்றி

எந்நாட் டவர்க்கு மிறைவா போற்றி

ஏனக் குருளைக் கருளினை போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

அருளிட வேண்டும் அம்மான் போற்றி

இருள்கெட அருளு மிறைவா போற்றி

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி

களங்கொளக் கருத அருளாய் போற்றி

அஞ்சேல் என்றிங் கருளாய் போற்றி

நஞ்சே யமுதா நயந்தாய் போற்றி

அத்தா போற்றி ஐயா போற்றி

நித்தா போற்றி நிமலா போற்றி

பத்தா போற்றி பவனே போற்றி

பெரியாய் போற்றி பிரானே போற்றி

அரியாய் போற்றி அமலா போற்றி

மறையோர் கோல நெறியே போற்றி

முறையோ தரியேன் முதல்வா போற்றி

உறவே போற்றி உயிரே போற்றி

சிறவே போற்றி சிவமே போற்றி

மஞ்சா போற்றி மணாளா போற்றி

பஞ்சே ரடியாள் பங்கா போற்றி

அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி

இலங்கு சுடர்எம் மீசா போற்றி

கவைத்தலை மேவிய கண்ணே போற்றி

குவைப்பதி மலிந்த கோவே போற்றி

மலைநா டுடைய மன்னே போற்றி

கலையார் அரிகே சரியாய் போற்றி

திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி

பொருப்பமர் பூவணத் தரனே போற்றி

அருவமும் உருவமு மானாய் போற்றி

மருவிய கருணை மலையே போற்றி

துரியமு மிறந்த சுடரே போற்றி

தெரிவரி தாகிய தெளிவே போற்றி

தோளா முத்தச் சுடரே போற்றி

ஆளா னவர்கட் கன்பா போற்றி

ஆரா அமுதே அருளே போற்றி

பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி

தாளி அறுகின் தாராய் போற்றி

நீளளி யாகிய நிருத்தா போற்றி

சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி

சிந்தனைக் கரிய சிவமே போற்றி

மந்திர மாமலை மேயாய் போற்றி

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி

புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி

அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி

கருங்குரு விக்கன் றருளினை போற்றி

இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

படியுறப் பயின்ற பாவக போற்றி

அடியடு நடுஈ றானாய் போற்றி

நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்

பரகதி பாண்டியற் கருளினை போற்றி

ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி

செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி

கழுநீர் மாலைக் கடவுள் போற்றி

தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி

பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்

குழைத்த சொன்மாலை

கொண்டருள் போற்றி

புரம்பல எரித்த புராண போற்றி

பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி

போற்றி போற்றி புயங்கப் பெருமான்

போற்றி போற்றி புராண காரண

போற்றி போற்றி சயசய போற்றி

திருச்சிற்றம்பலம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு ,

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை

     திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அட்சரங்களில் நான் அகரமாக உள்ளேன் என்றான் கீதையில் கண்ணன். அ என்று எழுத்துடன் வருவது அம்மா. உலகத்தில்  கெட்டா அப்பா உண்டு. கெட்ட அம்மா கிடையாது. குடும்பத்தில் உள்ள வேதனைகளையும், சோதனைகளையும் அம்மாதான் சுமக்கிறாள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய் என்பது  பழமொழி. மனிக உறவிலேயே தாய்தான் தெய்வ அன்பு காட்டுகிறாள்.  அந்த த் தாயினும் தாயாய் உயிர்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி..... திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்னும் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் பொருளை அனுபவத்தில் அன்னை ஆதிபராசக்தி எனக்குப் புரிய வைத்தாள். எனக்குத் தரிந்த குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது... சென்னை மாம்பலத்தில் ஒரு குடும்பம். நாயுடு வகுப்பைச் சேர்ந்த குடும்பம் அது.       கணவன், மனைவி, 3 பெண்கள் கொண்ட குடும்பம் அது .  ராயப்பேட்டையில்  தபால் நிலையத்தில் தபால்கார ர்கள் விடுமுறையில் சென்றால் அந்த இடத்தில் போய் வேலை செய்வார் அந்த அன்பர்.. தொட்டுக் கொள்ள துடைத்துக்கொள்ள என்ற அளவில் மட்டும் பொருளாதார  வசதி.   ஏதோ அவர்கள் வாழ்க்கை வண்டி மெதுவாக ந