முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆதிகாஞ்சி அண்ணாமலை!

 


லகிலேயே மிகப்பழைமையான மலைகளில் திருவண்ணா மலையும் ஒன்று. இதன் வயது 260 கோடி ஆண்டுகள் என்பர். கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், இந்தக் கலி யுகத்தில் மருந்து மலையாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை என்கின்றன புராணங்கள். இது `ஆர்க்கேயன்’ காலத்து மலை என்றும், இது முன்னர் எரிமலையாக இருந்து பின்னர் குளிர்ந்தது என்றும் சொல்வர்.

ண்ணுதல்- நெருங்குதல்; அண்ணா- நெருங்க முடியாதது என்று பொருள். திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத மலை என்பதால் அண்ணா மலை. ‘திரு’ எனும் மரியாதை சேர்த்து திருஅண்ணாமலை என்பதே சரி.

ருணாசலபுரக் கதையை குத்சர், உரோமசர், குமுதர், குமுதாட்சர், சகடாயர், அகத்தியர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக் ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தி தேவரும், மார்க்கண்டேய ரும் கூறியுள்ளனர்.

லகஅளவில் உள்ள எல்லா சிவன் கோயில்களிலும்,கருவறையின் பின்புறம் ‘லிங்கோத்பவர்’ இடம் பெற்றிருப்பார். அவர் தோன்றிய இடம்-திருவண்ணாமலை.

பிருங்கி முனிவர் இழந்த சக்தியை பெற்றது திருவண்ணாமலையில். காஞ்சியில் பல்வேறு அறங்கள் செய்து தவமிருந்த அன்னை காமாட்சி, திருவண்ணாமலையில்தான் ஈசனை தரிசித்து மீண்டும் அவரை அடைந்தாளாம். அதனால் இது `ஆதி காஞ்சி’ எனவும் போற்றப்படுகிறது.

ண்ணாமலையின் உயரம் சுமார் 2,665 அடிகள். மலையே லிங்கமாக வணங்கப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள 5 பிராகாரங்களுடன், மாட வீதி 6-வது பிராகாரமாகவும், கிரிவலப் பாதை 7-வது பிராகார மாகவும் கொள்ளப்படுகிறது. இந்தத் திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஒன்பது கோபுரங்களுடன் அமைந்துள்ளது.

ருவறை தொடங்கி கோபுரம்-மதில்கள் வரையிலுமான இந்தப் பிரமாண்ட ஆலயம் இப்போதுள்ள நிலையை அடைய, ஆயிரம் ஆண்டுகள் ஆயினவாம். காலக் கணக்குகளை விவரிக்கும் ஏராளமான கல்வெட்டுக்கள் கோயிலில் உள்ளன.

லயங்களில் கும்பாபிஷேகத்தின்போது, சுவாமி சிலைக்கும் பீடத்திற்கும் நடுவில் ‘அஷ்டபந்தன மருந்து’ சாற்றுவார்கள்.திருவண்ணாமலை மட்டும், லிங்கத்தைச் சுற்றிலும் தங்கத்தை உருக்கி ஊற்றி, ‘சொர்ண பந்தனம்’ செய்வார்கள்.

ருணாசலேஸ்வரர் கோயில் வளாகத்தில் அண்ணாமலையாரின் பாதம் அமைந்துள்ளது. இதற்குத் தினமும் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன

ஆதிகாஞ்சி அண்ணாமலை!

ண்ணாமலையாருக்கு வேறுபல சிறப்பு பெயர்களும் வழங்கப்படுகின்றன. அவற்றில் சில: லிங்கோத்பவ மூர்த்தி, இமய லிங்கம், பிரம்ம லிங்கம், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், அர்த்த நாரீஸ்வரர், கல்யாணசுந்தரர், அருணா சலேஸ்வரர், ஈசான லிங்கம், சிதம்பரேஸ்வரர், அக்னி லிங்கம், சம்புகேஸ்வரர், நாரதேஸ்வரர், வால்மீகிஸ்வரர், வியாச லிங்கம், வசிஷ்ட லிங்கம், கௌசிகேஸ்வரர், வைசம்பாத னேஸ்வரர், தும்புரேஸ்வரர், காசி லிங்கம்.

திருவண்ணாமலை ஊட்டியார், திருவண் நாட்டு மாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், திருவண்ணாமலை ஆண்டவர் - இந்தத் திருநாமங்கள் எல்லாம் இங்கே கோயில் கல் வெட்டுக்களில் காணப்படுகின்றன.

ங்கே சிவபெருமானுக்கு தினந்தோறும் ஆறு கால பூஜைகள் நடைபெறும். ஆனால் அம்பாளுக்கு ஐந்து கால பூஜைகள்தான்.காரணம்? ஆறாம் காலம் அபிஷேகம் செய்தால், அம்பிகையின் கூந்தல் காயாது என்பதால், கூந்தலில் மலர் மட்டும் மாறும்!

றைவிக்கு இடப்பாகம் கொடுத்த தலம் திருவண்ணாமலை. மலையைச் சுற்றி வந்தே இடப்பாகம் பெற்ற அம்பிகை, நிருதி திசையில் ஓர் இடத்திலும்; ஈசான்ய திசையில் ஓர் இடத்திலுமாக இரண்டு இடங்களில் ரிஷபாரூடராக சிவபெருமானை தரிசித்தார்.

ங்கு நடத்தப்படும் திருக்கல்யாணங்கள், உண்ணாமுலையம்மன் சந்நிதியில்தான் நடத்தப்படும்; அண்ணாமலையார் சந்நிதியில் எந்தத் திருமணமும் நடைபெறாது.

கார்த்திகை தீபத்திருநாள் அன்று, ஆலயத்தில் சுவாமிக்குத் தேனும் தினைமாவும் மட்டும்தான் படைக்கப்படும். கணவனும், மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி சிவபெருமான், பார்வதிதேவிக்கு தன் உடலில் பாதி பாகத்தை வழங்க உருவாக்கிய புனித நாள்தான் திருக்கார்த்திகை தினம். அன்றுதான் அர்த்தநாரீஸ்வரர் உருவம் திருவண்ணா மலையில் உதயமானது. முதன் முதலில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றி வழிபட்ட பெருமை பார்வதியைச் சாரும் என்கிறது புராணம்.

கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படும் கொப்பறையில் இருந்து எடுக்கப்படும் மை மிகவும் புனிதத் தன்மை வாய்ந்தது. இதை முதலில், மார்கழி ஆருத்ரா திருவிழாவில் எழுந்தருளும் நட ராஜப் பெருமானுக்கு அணிவித்துவிட்டு, அதன்பிறகே அடியார் களுக்கு வழங்குவார்கள்.

ஆதிகாஞ்சி அண்ணாமலை!

குழந்தைச் செல்வத்துக்காக அண்ணாமலையாரை வேண்டியவர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் கரும்புக் கட்டுகள் மற்றும் புடவையால் தொட்டில் கட்டி, குழந்தையைப் படுக்க வைத்து, மாட வீதியை வலம் வந்து பிரார்த்திப்பது இங்கு சிறப்பு.

ற்போது விஜயதசமி அன்று, குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் வைபவம் நடைபெறுகிறது. ஆனால் முன்னோர்கள் காலத்தில் திருவண்ணாமலையில், ‘தைப்பூச’ திருநாளன்றுதான் பள்ளியில் சேர்ப்பார்கள். அதற்கு ‘சுவடித் தூக்கல்’ எனும் அழகான தமிழ்ப்பெயரும் உண்டு.

தைப்பூசத் திருநாள் அன்று ஈசான்ய தீர்த்தவாரி முடித்து அண்ணாமலையார் திரும்புவார். அப்போது கறுப்புக் கம்பளி போர்த்தி முக்காடு போட்டபடி ஒருவர் அண்ணாமலையாரை நெருங்கி, வல்லாள மன்னர் இறந்த செய்தியைச் சொல்லுவார்.

தைப்பூசத்தன்று இறந்த வல்லாள மன்னருக்கு, மாசி மகத்தன்று அண்ணாமலையார் திதி கொடுப்பார்; மாசி பூரத்தன்று மகுடம் சூட்டிக்கொள்வார். வருடம்தோறும் நடக்கும் திருவிழாக்களில் இதுவும் ஒன்று.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியான அண்ணாமலையாருக்கு, தை மாதம் முதல் நாளன்று இரவு ஒருமணிக்கு மிகப்பெரும் அளவில் அபிஷேகம் நடக்கும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த அபிஷேகம் ‘மகா அபிஷேகம்’ எனப்படும்.

ங்கே ஆலயத்தின் முதன்மையான நுழைவு வாசல்-கிழக்குப் பக்கம் அமைந்திருக்கும் ராஜகோபுரம். ஆனால் இந்த ராஜ கோபுரத்தின் வழியாக எந்த உற்சவ மூர்த்தியும் வெளியே வருவதும் இல்லை; உள்ளே செல்வதும் இல்லை. அருகில் இருக்கும் திட்டி வாசல் வழியாக மட்டுமே, சுவாமி புறப்பாடும்-திரும்புவதும் நடைபெறும். பிட்சாடனருக்கு மட்டும் விதிவிலக்கு; அவர் வாகனம் அங்கு இருப்பதால்.

ஆதிகாஞ்சி அண்ணாமலை!

முதலாம் ராஜேந்திர சோழ மன்னரிடம் உதவியாளராக இருந்த ‘பாண்டி உதய திவாகரன்’ என்பவர், இத்திருக்கோயிலுக்குப் பிட்சாடனர் திருவுருவம் செய்துவைத்தார்; கூடவே அந்த பிட்சாடனருக்கு மூன்று கால நைவேத்தியத்தின் பொருட்டு, ஆண்டுக்கு நூறு கலம் நெல் அளிக்கும்படி ஏற்பாடும் செய்தார். இந்த நெல் அளக்கும் மரக்காலின் பெயர் `திருவண்ணாமலை மரக்கால்’.

ங்குள்ள கிளிக்கோபுரம் 1061-ல் கட்டப்பட்டது. இதில் ஏராள மான கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் மிகவும் பழமையான கல்வெட்டு 1063-ம் ஆண்டைச் சேர்ந்தது. கிளிக் கோபுரத்தின் அடித் தளத்தில் அமைந் துள்ள உள் மாடத்தில், ‘மோகினி’ சிலை ஒன்று உள்ளது. இந்தச் சிலையைக் கோயிலுக் குப் போய்விட்டுத் திரும்பும் யாரும் பார்க்கக் கூடாது; பார்த்தால், சுவாமியிடம் நாம் பெற்ற வரங்களை இந்த மோகினி கவர்ந்து கொள்வாள் என்பது நம்பிக்கை!

லயத்தில் உள்ள ‘பிரம்ம தீர்த்தம்’ எனும் திருக்குளத்தில், கிரகணக் காலங்களில் மட்டும் நீராடலாம் எனும் வழக்கம் உண்டு.

கோபுரத்து இளையனார் சந்நிதியின் குறுக்கே சுவர் போட்டு, வௌவால்கள் நிறைந்து - நீண்டகாலம் வழிபாடு இல்லாமல் இருந்தது. இந்த நிலையை மாற்றி தூய்மை செய்து, வழிபாடுகளைத் தொடங்கியவர் - வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்.

ருணகிரிநாதருக்கு உற்சவத் திருமேனி உருவாக்க ஏற்பாடுகள் நடந்தன. பலமுறை முயன்றும் விக்கிரகம் வார்க்க முடியவில்லை. அப்போது துறவி ஒருவர் வந்து, மலையில் இருந்து ஒரு சிட்டிகை மண் எடுத்து உலோகக் குழம்பில் போட்டார். அதன்பின்னரே, விக்கிரம் வார்க்க முடிந்ததாம்.

ர்வஸித்தி விநாயகர் சந்நிதியின் வடக்குப் பக்கம் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்குப் பகுதியில் பாதாளலிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு ரமண மகரிஷி பல காலம் தங்கி, தவம் இருந்தார் என்று வரலாறு சொல்லும்.

திருவண்ணாமலை என்றாலே நினைவிற்கு வரும் மகான்களான பகவான் ரமணரும் விசிறி சாமியார் என அழைக்கப்பட்ட யோகி ராம் சுரத்குமாரும் இருமுறை சந்தித்தார்கள். ஆனால் ஒருமுறை கூடப் பேசியது இல்லை.

கிரிவலம் வரும்போது ரமண மகரிஷி, ஈசானிய ஞான தேசிகர் மடத்தில், கீதை ஆராய்ச்சி வகுப்பில் பாடம் நடத்தி இருக்கிறார்.

ண்ணாமலை மீது தண்டாயுதபாணி சுவாமி ஆசிரமம் என்று உள்ளது. இங்கே ஒன்றரை அடி உயரத்தில் நவ பாஷாணத்தால் ஆன ஜோதி லிங்கத்தை தரிசிக்கலாம்.

திருவண்ணாமலையில் இருந்த மகான்களில் ஒருவரான ‘ஈசானிய ஞான தேசிகர்’ ஜீவசமாதி உள்ள மடத்தில், ஒரு பெரும் மரப்பேழை நிறைய ஓலைச்சுவடிகள் உள்ளன.

ஆதிகாஞ்சி அண்ணாமலை!

திருவண்ணாமலையில் 1976-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதை வண்ணப் படமாக எடுத்து, நல்லமுறையில் மூலப் பிரதியாக மாற்ற (ப்ராசசிங்), அமெரிக்காவுக்கு அனுப்பினார்களாம்!

கிரிவலம் வரும் வழியில் ‘தலை திருக தனம் கொடுத்த விநாயகர் சந்நிதி’ ஒன்று உள்ளது. இந்த விநாயகரின் தலை மீதுள்ள கிரீடத் தைக் கழற்றினால், அது தனியாக வந்துவிடும்; உள்ளே கை விட்டால், முழங்கை வரை உள்ளே போகும் என்பார்கள்.

லையில் ‘புகுந்து குடித்தான் சுனை’ எனும் சுனை உள்ளது. அந்த இடத்திலிருந்து ‘அண்ணாமலைக்கு அரோகரா!’ என்று குரல் கொடுத்தால், அதன் எதிரொலி முதலில் ஒரு முறை கேட்கும்; சற்று நேரம் கழித்து இரண்டாவது எதிரொலி கேட்கும்.

ந்த மலையில் அபூர்வமான வகையைச் சேர்ந்த குரங்கு இனம் உள்ளது. இந்தக் குரங்குகளை ‘கருங்குரங்கு’ என்றும் ‘மந்தி முயல்’ என்றும் அழைக்கிறார்கள். இவை எப்போதும் மலையை விட்டுக் கீழே இறங்கி வருவது இல்லையாம்.

கை-கால்களில் முறிவு ஏற்பட்டுக் கட்டு போடும்போது, அந்த இடத்தில் ரத்த ஓட்டம் பாதிகப்பட்டு, அந்த இடம் முறடு கட்டிவிடும். அதைச் சரிசெய்ய, கல்லரசன் மரத்துப் பாலை அடிப்பார்கள். மருத்துவக் குணம் மிக்க அந்தக் கல்லரசன் மரம், இங்கே மலையில் இருக்கிறது.

சித்தர்கள் வழிகாட்டிய கிரிவலம்!

கிரிவலம் வருவதில் லட்சத்து எட்டு முறைகள் உள்ளனவாம். ஒவ்வொரு முறைக்கும், ஒவ்வொரு பலன் கிட்டும். அதில் சித்தர்கள் சொல்லியுள்ள கிரிவல முறையானது இது:

தெற்குக் கோபுர வாயில் அருகிலுள்ள பிரம்ம லிங்கத்தில் தெற்கு வாயில் வழியாக வெளி வந்து, கிரிவலத்தைத் தொடங்கி, இரட்டைப் பிள்ளையார் ஆலயம் அருகில் உள்ள பூத நாராயணர் ஆலயத்தில் முடிக்கவேண்டும். நமக்கு ஈசன் லிங்க வடிவில் காட்சி தர முக்கியக் காரணம், பிரம்மாவும் மகா விஷ்ணுவும்.

னவே, ‘பிரம்மலிங்கத்தில்’ தொடங்கி, ‘பூத நாராயணர்’ ஆலயத்தில் முடிக்க வேண் டும். முதலில் குலதெய்வத்தையும் பிறகு பித்ருக் களையும் வேண்டி, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும். தெய்வத்தின் நாமாக்களைக் கூறிக் கொண்டே வலம் வரவேண்டும். மௌனமாக கிரிவலம் வருவது அளவில்லா நன்மை தரும்.

ங்கு தேவர்களும், முனிவர்களும், ஞானி களும், சித்தர்களும், பித்ருக்களும் கிரிவலம் வருகிறார்களாம். அவர்களுக்கு இடையூறு இல்லாமல் நாம் கிரிவலம் வருதல் வேண்டும். இங்கு மலையே இறைவன் ஆனதால், திருவிழா அன்று வேண்டுதல் இருப்பவர்கள் மட்டுமே மலை மீது ஏறிச் செல்ல வேண்டும்.

ஆதிகாஞ்சி அண்ணாமலை!

இந்த வருடம் மகா தீபம்...

மொத்தம் 14 நாள்கள் கொண்டாடப்படும் தீபத்திருவிழா, கிராமதேவதை வழிபாட்டுடன், அதாவது துர்கை அம்மனின் புறப்பாடுடன் தொடங்கும். திருவிழாவின் 7-ம் நாள் திருத்தேர் பவனியும் (3.12.22), 10-ம் நாள் தீபத்திருவிழாவும் (6.12.22) இங்கு விசேஷம்.

டிசம்பர்- 6 செவ்வாய்க் கிழமை அன்று அதிகாலை 4 மணிக்குப் பரணி தீபம் ஏற்றப்படும். இதையடுத்து, மாலை 6 மணிக்கு அண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும். முன்னதாக பஞ்ச மூர்த்திகளும் காட்சி மண்டபத்தின் அருகில் கொடி மரத்தடியில் எழுந்தருள்வர். தீபம் ஏற்றப்படுவதற்கு ஏறத்தாழ இரண்டு மூன்று நிமிடங்களுக்கு முன்னர் (மாலை 5:50 - 6:00 மணி வேளையில்) வேணுகோபாலன் சந்நிதிக்கு அருகில் இருந்து புறப்பட்டு ஆடிக்கொண்டே வருவார் அர்த்தநாரீஸ்வரர்.


ஸ்வாமி பஞ்சமூர்த்திகளை நெருங்கியதும், வந்த வேகத்திலேயே உள்ளே செல்ல... அவரது தரிசனம் கிட்டிய தருணம், மலை மீதிருக்கும் பர்வத ராஜகுலப் பெருமக்கள், கார்த்திகை பெருந் தீபத்தை ஏற்றுவார்கள். மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு ,

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை

     திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அட்சரங்களில் நான் அகரமாக உள்ளேன் என்றான் கீதையில் கண்ணன். அ என்று எழுத்துடன் வருவது அம்மா. உலகத்தில்  கெட்டா அப்பா உண்டு. கெட்ட அம்மா கிடையாது. குடும்பத்தில் உள்ள வேதனைகளையும், சோதனைகளையும் அம்மாதான் சுமக்கிறாள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய் என்பது  பழமொழி. மனிக உறவிலேயே தாய்தான் தெய்வ அன்பு காட்டுகிறாள்.  அந்த த் தாயினும் தாயாய் உயிர்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி..... திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்னும் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் பொருளை அனுபவத்தில் அன்னை ஆதிபராசக்தி எனக்குப் புரிய வைத்தாள். எனக்குத் தரிந்த குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது... சென்னை மாம்பலத்தில் ஒரு குடும்பம். நாயுடு வகுப்பைச் சேர்ந்த குடும்பம் அது.       கணவன், மனைவி, 3 பெண்கள் கொண்ட குடும்பம் அது .  ராயப்பேட்டையில்  தபால் நிலையத்தில் தபால்கார ர்கள் விடுமுறையில் சென்றால் அந்த இடத்தில் போய் வேலை செய்வார் அந்த அன்பர்.. தொட்டுக் கொள்ள துடைத்துக்கொள்ள என்ற அளவில் மட்டும் பொருளாதார  வசதி.   ஏதோ அவர்கள் வாழ்க்கை வண்டி மெதுவாக ந