முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சக்தி விரதம் ஏன்?

 சக்தி விரதம் ஏன்?

    "ஐம்புலன்களை அடக்கத்தான் விரதம். விரதம் இருந்தால் தான் நோய் வராது. உடலில் சேர்கிற அழுக்கைக் குளித்துப் போக்கிக் கொள்வது போல், துருப்பிடித்த பொருட்களை எண்ணெய் கொண்டு சுத்தப்படுத்துவது போல், உள்ளத்தில் ஏற்படும் அழுக்குகளை நீக்கிக் கொண்டு தூய்மையான வாழ்வு வாழ்வதற்கு விரதங்கள் உதவும்."

வசதி படைத்தவர்கட்கு - மன்றங்கட்கு:

    "ஏழைச் சிறுவர் 5 பேர்; சிறுமியர் 5 பேருக்கு இருமுடி போட்டு அழைத்து வந்தால் பலன் உண்டு. அனாதைக் குழந்தைகளையும் அணைக்க வேண்டும் என்பதற்காகப் பத்து பேருக்கு மாலை போட்டு அழைத்து வரும்படிச் சொல்கிறேன். அவர்களுடன் இருந்து செய்தால் பெருமை! பெருமை பணத்தால் இல்லை. அன்பாலும் தொண்டாலும் வருகிற பெருமையே பெருமை! அவற்றுக்குத்தான் பலன் உண்டு."

மாந்திரீகம் அழியும்

    "இருமுடி அணிந்தால் உங்களுக்கு எதிரான மாந்தீரீகம் அழியும்."

ஏழைக்கு இருமுடி

    "எத்தனை ஏழைக்கு இருமுடி அணிய வைத்து அழைத்துக் கொண்டு வருகிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு உனக்குப் பலன் உண்டு."

ஒன்பதுடன் நிறுத்திக் கொள்ளாதே

    "தொடர்ந்து இருமுடி செலுத்து! ஒன்பது மாலை போதும் என்று நினைத்துக் கொள்ளாதே! நீ செலுத்தும் ஒவ்வொரு முடிக்கும் கட்டாய பலன் உண்டு."

அவரவர் வினைகள் வெவ்வேறு

    "ஒன்பது முறை இருமுடி செலுத்திவிட்டால் உன் குறைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. சிலருக்கு ஐந்தாவது இருமுடி அணிந்தாலே வினைதீரும். சிலருக்கு 10, 11 என்று அணிந்தாலும் வினைகள் தீர்வதில்லை."

இருமுடியும் - பலனும்

    "இருமுடி செலுத்தியதும் பலனை உடனே எதிர்பார்க்காதே! ஒரு செடியை ஊன்றி நட்டபின் அது வேர்பிடித்துத் தளிர் விட்டுப் பூத்து பின் காய்த்து அதன்பிறகே கனி வரும். அதுபோல் உன் ஒவ்வொரு இருமுடிக்கும் கட்டாயம் பலன் உண்டு."

இடையில் நிறுத்திக் கொள்ளாதே!

    "இருமுடி அணிவதால் துன்பத்திலிருந்து நம்மை அம்மா காப்பாற்றுகிறாள், பாதுகாக்கிறாள் என்பதைத் தற்போது உணர்கிறீர்கள். செலுத்த வேண்டிய இருமுடியைச் செலுத்தி முடித்துவிட்டோம் என்று நினைத்து நிறுத்திக் கொள்ளாதே! அவ்வாறு நினைத்தால் எல்லாம் முடிந்துவிடும். இருமுடியை விட்டுப்பார் என்ன நடக்கிறதென்று தெரியும். ஒரு சமயம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் போகப்போக இரண்டு மடங்கு கஷ்டங்கள்தான் வரும்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு ,

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை

     திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அட்சரங்களில் நான் அகரமாக உள்ளேன் என்றான் கீதையில் கண்ணன். அ என்று எழுத்துடன் வருவது அம்மா. உலகத்தில்  கெட்டா அப்பா உண்டு. கெட்ட அம்மா கிடையாது. குடும்பத்தில் உள்ள வேதனைகளையும், சோதனைகளையும் அம்மாதான் சுமக்கிறாள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய் என்பது  பழமொழி. மனிக உறவிலேயே தாய்தான் தெய்வ அன்பு காட்டுகிறாள்.  அந்த த் தாயினும் தாயாய் உயிர்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி..... திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்னும் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் பொருளை அனுபவத்தில் அன்னை ஆதிபராசக்தி எனக்குப் புரிய வைத்தாள். எனக்குத் தரிந்த குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது... சென்னை மாம்பலத்தில் ஒரு குடும்பம். நாயுடு வகுப்பைச் சேர்ந்த குடும்பம் அது.       கணவன், மனைவி, 3 பெண்கள் கொண்ட குடும்பம் அது .  ராயப்பேட்டையில்  தபால் நிலையத்தில் தபால்கார ர்கள் விடுமுறையில் சென்றால் அந்த இடத்தில் போய் வேலை செய்வார் அந்த அன்பர்.. தொட்டுக் கொள்ள துடைத்துக்கொள்ள என்ற அளவில் மட்டும் பொருளாதார  வசதி.   ஏதோ அவர்கள் வாழ்க்கை வண்டி மெதுவாக ந