முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மாவின் ஆன்மிகப் பயணத்தில் ......



 14.08.2011 அன்று மதுரையில்  அம்மாவுக்கு வரவேற்பு அளிக்கும் முறையில் மாபெரும் ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. நான் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு பரமத்தி வேலூர் வழியாக திரும்பிவிட்டேன். உடன் வந்த சக்திகளை பத்திரமாக அவரவர் இடத்துக்கு கொண்டு சேர்த்து  விட்டேன்
          அடுத்த நாள்  மாலை அடுத்து அம்மா நடத்தவிருக்கும் கும்பாபிடேக  நிகழ்சிகளில் கலந்து கொள்ள விரும்பினேன். நிகழ்ச்சி நிரலை எடுத்து படித்தேன். 16.08.2011 அன்று ஆதிபராசக்தி குழந்தைகள் காப்பகம் திறக்கப் போவதாக அறிந்து அந்த இடத்தின் பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு பயனவழிகளை விசாரித்தேன்..
  இப்போது மதுரையில் நல்ல மழை பொழிந்து கொண்டு இருக்கிறது  அங்கே மழை பெய்கிறதா  சக்தி....?
என்று விசாரித்தார் எதிர்முனையில் பேசியவர்.
             மழை வருவது போல இருக்குது சக்தி! ஆனா பெய்யலை! என்று பதில் கூறினேன். அப்படியா என்று அவர் கேட்டதும் , நான் நாமக்கல் மாவட்டத்தில்  சரியான பக்தி இல்லை போல் இருக்கு! என்று சொல்லி ஓம் சக்தி! என்று கூறிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டேன்.
அடுத்து ஒரு ஐந்து நிமிடம் இடைவெளி விட்டு பூமியையே அதிர வைக்கும் அளவுக்கு இடியோசையும், கண்களைப் பறிக்கும் அளவுக்கு மின்னலும் தொடர்ந்து ஏற்பட்டன.
                   நான் பயத்தோடு டாலரைக் கையில்  பிடித்து கொண்டு அம்மா!     இந்த இயற்கையின் சீற்றத்தை எங்களால் தாங்க முடியாது தாயே! நாங்கள் ஏதாவது தவறு செய்து இருந்தால் எங்களை மன்னித்து விடு தாயே! என்று வேண்டி கொண்டேன்.
            அப்போது உள்ளிருந்து ஒரு குரல் என்னைக் கேட்டது.
      பக்திக்கா உங்கள் பக்திக்கு அருள் புரிவதா உங்கள் பக்திக்கு அருள் புரிய நினைத்தால் உங்களுக்கெல்லாம் அணு அளவு அருள்தான் கிடைக்கும்.
          இந்த கலியுகத்தில் நீங்கள் எல்லாம் படுகிற கஷ்டத்தை கண்டு  உங்களை காப்பாற்ற நானே வலிய வந்து  அருள் கொடுக்கிறேன் என் ஆலயம் வந்து தரிசிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அருள் கிடைக்கும். ஆனால் ஆன்மிகப் பயணம் என்பதில் வானத்து மழை போல  அருள் பொங்கும் அவரவர் இஷ்டம் போல வேண்டும் அளவு பெற்று கொள்ளலாம்.  உங்கள் பக்திக்காகவா அருள்பாளிக்கிறேன் என்ன பக்தி உங்கள் பக்தி?
        ஆன்மிக பயணம் என்றால் சாமான்யமானது  என்று நினைத்து கொண்டாயா?
உலகில் எந்த மூலையில் இருந்தும் யார் எதை பேசினாலும்  எனக்கு வந்து சேரும்...
       மதுரையில் ஆன்மிகப் பயணமாக நான் இருக்கும் பொது நீ மதுரைக்குப் பேசினால் எனக்குத் தெரியாமல் இருக்குமா....? என் காதுக்கு எட்டாமல் போய்விடுமா?
           இவ்வாறு வேகத்துடனும், வருத்தத்துடனும் அம்மாவின் குரல் ஆன்மாவில் பிரதிபலித்தது. மிகவும் பயந்து போன நான் , டாலரை இறுகப் பிடித்து கொண்டு, நான் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டு கொண்டு, நான் 108 முறை குரு மந்திரம் கூறிவிட்டு உறங்கிவிட்டேன்.
அடுத்த  நாள் மதுரைக்கு கிளம்பும் போது அம்மாவிடம் எங்கள் மாவட்டத்திற்கு உங்கள் அருளவேண்டும் அம்மா   நாளைக்கு நான் நீ இருக்கும் மதுரைக்கு வந்து விடுவேன். அப்போது எங்கள் பகுதியில் இடி மின்னல் இல்லாமல் தேவையான மழை கொடு தாயே என்று வேண்டிக் கொண்டு புறப்பட்டேன்.
          அன்று புதன் கிழமை கரடிக்கல் என்ற இடத்தில் கும்பாபிடேக நிகழ்சிகளைத் தரிசிப்பதற்காக காத்துக் கொண்டு இருந்தேன்..
   கும்பாபிடேகம் முடிந்து, தீர்த்தம் தெளிக்கப் பட்டது. எல்லோர் மீதும் தீர்த்தம் தெளிப்பதற்கு வசதியாக அண்டாவில் தீர்த்தம் ந்ரப்பி அதை ஒரு டியுப்  வழியாக அனைவர் மீதும் தெளித்தார்கள். நல்ல யோசனை! நல்ல ஏற்பாடு!
    தீர்த்தம் தெளித்தபோது கையிலிருந்த பிளாஸ்டிக் டப்பாவின் மூடியைத் திறந்து காண்பித்தேன். அதில் சிறிதளவே தீர்த்தம் விழுந்தது. அதை இருக்க மூடி விட்டு நின்றேன். மீண்டும் தீர்த்தம் விடப்பட்டது. இருப்பில் உள்ள தீர்த்தத்தை குடித்துவிட்டு மீண்டும் டப்பாவைத் திறந்து பார்த்தபோது  அதில் உயுருடன் சிறிய கரு வண்டு ஓன்று இருந்தது. மூடிய டப்பாவில் இந்த வண்டு எப்படி வந்தது? என்று யோசித்தவாறு அந்த வண்டை வெளியே  தட்டிவிட்டு நிறைய தீர்த்தம் பிடித்து வைத்து கொண்டேன்.
   பின் சக்தி பீடத்துள் சென்று கருவறை அம்மாவைத் தரிசித்து விட்டு சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தேன்.
   அப்போது மூடிய டப்பாவில் வண்டு எப்படி வந்தது உயிரை உண்டாக்குவதும் நான்தான் அழிப்பதும் நான்தான் ஆன்மிகப் பயணம் என்ன சாமான்யமா இதைச் சக்தி ஒளிக்கு எழுது என்று அம்மா உணர்த்தினார்கள்.
       அன்று மாலை பரமத்தி வேலூர் பகுதியில் இடி மின்னல் இல்லாமல் அருள் மழை கொடுத்தால். 
  இந்த ஆன்மிகப் பயணத்தில் பல மாவட்டத்தவர்களும் கலந்து கொண்ட காரணத்தால் அந்த மாவட்டங்களுக்கும் மழை கொடுத்தால் அன்னை.
 அது பருவ மழை அல்ல பராசக்தி கொடுத்த அருள் மழை
   என்னவோ அம்மா மதுரைக்கு கும்பாபிடேகம் செய்யப் போகிறாள் அம்மாவை வரவேற்க அந்த மாவட்டத்தார்  ஊர்வல ஏற்பாடு செய்கிறார்கள்  தொலை  தூரம் பொய் நாமும் கலந்து கொள்ள வேண்டுமா என்ன என்று நம் தொண்டர்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது  நம் ஒவ்வொரு செயலுக்கும்  ஒரு பலன் உண்டு  என்பதை மறந்து விட வேண்டாம்.
              ஓம் சக்தி
சக்தி ஏ கே பூங்கோதை,
இராமநாயக்கன் பாளையம், நாமக்கல் மாவட்டம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு ,

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை

     திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அட்சரங்களில் நான் அகரமாக உள்ளேன் என்றான் கீதையில் கண்ணன். அ என்று எழுத்துடன் வருவது அம்மா. உலகத்தில்  கெட்டா அப்பா உண்டு. கெட்ட அம்மா கிடையாது. குடும்பத்தில் உள்ள வேதனைகளையும், சோதனைகளையும் அம்மாதான் சுமக்கிறாள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய் என்பது  பழமொழி. மனிக உறவிலேயே தாய்தான் தெய்வ அன்பு காட்டுகிறாள்.  அந்த த் தாயினும் தாயாய் உயிர்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி..... திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்னும் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் பொருளை அனுபவத்தில் அன்னை ஆதிபராசக்தி எனக்குப் புரிய வைத்தாள். எனக்குத் தரிந்த குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது... சென்னை மாம்பலத்தில் ஒரு குடும்பம். நாயுடு வகுப்பைச் சேர்ந்த குடும்பம் அது.       கணவன், மனைவி, 3 பெண்கள் கொண்ட குடும்பம் அது .  ராயப்பேட்டையில்  தபால் நிலையத்தில் தபால்கார ர்கள் விடுமுறையில் சென்றால் அந்த இடத்தில் போய் வேலை செய்வார் அந்த அன்பர்.. தொட்டுக் கொள்ள துடைத்துக்கொள்ள என்ற அளவில் மட்டும் பொருளாதார  வசதி.   ஏதோ அவர்கள் வாழ்க்கை வண்டி மெதுவாக ந