முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்னையின் அருள்வாக்கு


அபிடேக ஆராதனைகளால்....
நீ செய்யும் அபிடேக ஆராதனைகளால் மட்டுமே உன்னுடைய தீவினைகள் தீர்ந்துவிடாது. உன் ஆன்மா சுத்தமாக இருக்க வேண்டும். கலங்கிய நீருக்கு எடை அதிகம். சுத்தமான நீருக்கு எடை குறைவு. உன் உள்ளம் சுத்தமாக இருந்தால் தான் பாவங்கள் குறையும்.
உன் நிழலே உன்னைக் கண்காணிக்கும்
உன்னுடைய நிழலே உன்னைக் கண்காணித்து வருகிறது. இருட்டில் நிழலைக் காண முடியாது. வெளிச்சத்தில் நிழல் தெரியும். எல்லாப் பொருளுக்கும் நிழல் உண்டு. தெய்வ சக்தி நிழலைப் போல உன்னைக் கண்காணித்துக் கொண்டு வருகிறது.
பரிகாரங்களால் பயனில்லை
ஒரு தாய் வயிற்றில் பிறக்கும் குழந்தை கூனாகவோ, குருடாகவோ, செவிடாகவோ பிறப்பதற்கு அந்த ஆன்மாவின் முன் வினையே காரணம். தாய் காரணமாக மாட்டாள். சோதிடர்கள் கூறும் பரிகாரங்களால் அத்தகைய ஊனங்கள் தீர்ந்து விடாது.
ஏமாற்றுபவனை விடமாட்டேன்
தன் பிள்ளை, தன் பெண், தண் குடும்பம், தன் பேரன், தன் பேத்தி எனத் தானும் தன் குடும்பம் மட்டும் வாழவேண்டும் என்பதற்காகப் பிறர் பொருளைச் சுரண்டி ஏமாற்றுபவனை, மரத்தின் உச்சியில் ஏறிப்பழம் பறித்துச் சாப்பிடும் வரை விட்டு வைப்பேன். அவனை இறக்கிவிடமாட்டேன். அவன் தானாகவே கீழே விழுந்து அடிபட வேண்டியவனே.  அவனவன் எண்ணமே அவனவனுக்கு எமனாக மாறும்.
மறுபிறவி சுற்றிச் சுற்றி வரும்
பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்று உண்டு. மழை பெய்து கடலை அடைவது போல போல ஆன்மா மறு பிறவியை அடைவது உண்டு.
ஒரு விதையானது குழியால் விழுந்து செடியாகி, மரமாகி, பூ பூத்து காய் காய்த்து பழம் பழுத்து மீண்டும் விதையாவது போல மறுபிறவியும் சுற்றிச் சுற்றி வரும்.
நீ சம்பாதிக்கும் பொருள்
நேர்மையாக  உழைத்து வியர்வை சிந்திப் பெறுகிற பொருள் தான் உனக்கு நிலைக்கும். மற்றவை நிலைக்காது.
சறுக்கி விழும் ஓர் அடி
ஆன்மிகத்தில் பத்து அடி ஏறினால், பதினோறு அடி சறுக்கி விழுகிறீர்கள். அந்த ஓர் அடி தான் நீ செய்யும் பாவத்தின் அளவாகும்.

நன்றி சக்தி ஒலி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு ,

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை

     திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அட்சரங்களில் நான் அகரமாக உள்ளேன் என்றான் கீதையில் கண்ணன். அ என்று எழுத்துடன் வருவது அம்மா. உலகத்தில்  கெட்டா அப்பா உண்டு. கெட்ட அம்மா கிடையாது. குடும்பத்தில் உள்ள வேதனைகளையும், சோதனைகளையும் அம்மாதான் சுமக்கிறாள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய் என்பது  பழமொழி. மனிக உறவிலேயே தாய்தான் தெய்வ அன்பு காட்டுகிறாள்.  அந்த த் தாயினும் தாயாய் உயிர்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி..... திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்னும் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் பொருளை அனுபவத்தில் அன்னை ஆதிபராசக்தி எனக்குப் புரிய வைத்தாள். எனக்குத் தரிந்த குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது... சென்னை மாம்பலத்தில் ஒரு குடும்பம். நாயுடு வகுப்பைச் சேர்ந்த குடும்பம் அது.       கணவன், மனைவி, 3 பெண்கள் கொண்ட குடும்பம் அது .  ராயப்பேட்டையில்  தபால் நிலையத்தில் தபால்கார ர்கள் விடுமுறையில் சென்றால் அந்த இடத்தில் போய் வேலை செய்வார் அந்த அன்பர்.. தொட்டுக் கொள்ள துடைத்துக்கொள்ள என்ற அளவில் மட்டும் பொருளாதார  வசதி.   ஏதோ அவர்கள் வாழ்க்கை வண்டி மெதுவாக ந