முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்னையின் அருள்வாக்கு,


கலச விளக்கு  வேள்விப் பூசைகள்:
உங்களிடம் உள்ள அறியாமையை நீக்கி அறிவை வளர்ப்பதற்குத்தான் கலச விளக்கு வேள்விப் பூசை.
யாகம் யோகத்திற்கு உதவும் ஓம் என்ற ஓங்கார ஒலிக்கும் பயன்படும். உயர்வு தாழ்வுகள் நீக்கவும் பயன்படும்.
இயற்கையை ஒட்டி நீங்கள் வாழ்வதற்கு வேலிபோலப் பாதுகாக்கும். உலகத்தில் உள்ள சலசலப்புகள் நீங்கிக் கலகலப்பு ஏற்படக் கலசங்கள் உதவும்.
அதர்மங்கள் நீங்கித் தர்மங்கள் செழிக்க வேண்டுமானால் வேள்விப்பூசை அவசியம். மேல்மட்டம் நடுமட்டம், கீழ்மட்டம் என்று பாராமல் எல்லோரும்
பூசை செய்ய வேண்டும். எந்த வேள்விக்குப் போனாலும், வந்தாலும் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பருத்தி நூல் புடவைதான்
உடுத்த வேண்டும். ஜாக்கிரதையுடன் யாக சாலையில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
உனக்கு நீதான் பாதுகாப்பு:
ஆன்மிக மாநாடுகளும், கலச விளக்கு வேள்விப்பூசைகளும் உங்களுக்காகவே தவிர
எனக்காகவோ அடிகளாருக்காகவோ அல்ல.
எந்த அரசும் எல்லோருக்கும் சேர்த்து எந்த நன்மையும் பாதுகாப்பையும் அளித்து விட முடியாது. உனக்கு நீதான் பாதுகாப்பு
ஆன்மிக மாநாடுகளும் வேளிவிகளும்தான் பரிகாரம்:
இன்று உலகமே கொந்தளிப்பாக இருக்கிறது. இந்தக் கொந்தளிப்புகள் அடங்கி உலகம் அமைதிபெற வேண்டுமானால் கலச, விளக்கு வேள்விப்பூசைகளும் ஆன்மிக மாநாடுகளும் தேவை.
உலகம் அமைதி பெற ஆன்மிக மாநாடு நடத்த வேண்டும் என்று தாயிடம் நீங்கள்தான்  வேண்டிக்கொள்ள வேண்டும்.
சாந்தி வேள்வி:
உலகில் திடீர் மரணத்தால் 400 பேர் 500 பேர் என இறக்கும்  போது, மரணமடைந்த ஆன்மாக்கள் பேயாக அலையும். இவற்றை ஆன்மிகத்தால்தான் சாந்தி செய்ய வேண்டும். அக்கிரமங்களினால்  சாந்தி செய்ய முடியாது.
குடும்பத்துடன் கலந்து கொள்:
தாய் ஆரோக்கியமாக இருந்தால்தான் சேய் ஆரோக்கியமாக  இருக்கும். ஆதலால், வேள்விப்பூஜைகள் நடக்கும்போது குடும்பத்துடன் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.
வேதனை தீர்க்க:
உங்கள் வேதனைகளைத் தீர்க்கத்தான் வேள்வி
சக்கரங்கள் பற்றி.....
கோடுகள் கோணங்கள் ஆகும்ய கோணங்கள் கோலங்கள் ஆகும். கோலங்கள் கோணலானால் கோளங்கள் கோணலாகும்.
ஓம் சக்தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு ,

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை

     திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அட்சரங்களில் நான் அகரமாக உள்ளேன் என்றான் கீதையில் கண்ணன். அ என்று எழுத்துடன் வருவது அம்மா. உலகத்தில்  கெட்டா அப்பா உண்டு. கெட்ட அம்மா கிடையாது. குடும்பத்தில் உள்ள வேதனைகளையும், சோதனைகளையும் அம்மாதான் சுமக்கிறாள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய் என்பது  பழமொழி. மனிக உறவிலேயே தாய்தான் தெய்வ அன்பு காட்டுகிறாள்.  அந்த த் தாயினும் தாயாய் உயிர்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி..... திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்னும் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் பொருளை அனுபவத்தில் அன்னை ஆதிபராசக்தி எனக்குப் புரிய வைத்தாள். எனக்குத் தரிந்த குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது... சென்னை மாம்பலத்தில் ஒரு குடும்பம். நாயுடு வகுப்பைச் சேர்ந்த குடும்பம் அது.       கணவன், மனைவி, 3 பெண்கள் கொண்ட குடும்பம் அது .  ராயப்பேட்டையில்  தபால் நிலையத்தில் தபால்கார ர்கள் விடுமுறையில் சென்றால் அந்த இடத்தில் போய் வேலை செய்வார் அந்த அன்பர்.. தொட்டுக் கொள்ள துடைத்துக்கொள்ள என்ற அளவில் மட்டும் பொருளாதார  வசதி.   ஏதோ அவர்கள் வாழ்க்கை வண்டி மெதுவாக ந