முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்னையின் அருள்வாக்கு




  "பெற்ற பாசத்திற்கு அன்று தொப்புள் கொடி, வளர்த்த பாசத்திற்கு இன்று கட்டு முடி… அம்மா நமக்காக ஏற்படுத்தித் தந்த தைப்பூச சக்திமாலை இருமுடி எனும் பொன்னான வாய்ப்பை அம்மா கூறியபடி சிறப்பான முறையில் பயன்படுத்தி, நம் முன் ஜென்ம, நிகழ்கால பாவ மூட்டைகளைக் குறைத்து, ஆன்ம ஈடேற்றத்தையும், வேண்டிய வரங்களையும் பெற்று வாழ்வில் மேன்மையடைவோம். ஒம்சக்தி பராசக்தி…”


விதியையே மாற்ற வேண்டுமானால்…
    

    "உன் விதியை மாற்றியமைக்கும் வல்லமை எனக்கு உண்டு. சாதரணமாக உன் விதியை அனுபவிக்கும் படி நான் விட்டு விடுகிறேன். என்னிடம் அளவுகடந்த பக்தி செலுத்தி, சரணாகதியடைந்து நான் சொல்கிற பணிகளைச் சிரத்தையோடு செய்து வந்தால், அப்போது உன் விதியையும் மாற்றியமைக்கும் செயலை மேற்கொள்கிறேன்

இருமுடி – பொருள் 

    "இருமுடி என்பதற்கு இருள்முடி என்று பொருள். இதயத்தில் உள்ள இருளைப் போக்க அணியும் முடி என்று பொருள். கணவன், மனைவி இருவரின் அகத்தோற்றத்தையும் முடி போடுவது என்று பொருள். மற்றும் மனிதனின் அகமும், புறமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையும் இருமுடி குறிக்கும்.”

குடும்பத்தோடு சந்நிதிக்கு வா
    

    "பணக்கஷ்டம் காரணமாகத் தொண்டர்கள் சிலர் தாம் மட்டும் அடிக்கடி மருவத்தூர் வருவார்கள்; விழாக்காலங்களில் மட்டும் தான் குடும்பத்தை அழைத்து வருவார்கள்! அவர்கள் நிலை அப்படி! ஆனால் அம்மா அதனை ஏற்றுக் கொண்டது இல்லை!

    அடிக்கடி குடும்பத்தோடு வந்து சந்நிதியை மிதித்துவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்கிறேன். ஆனாலும் எவனும் கேட்பதில்லை மகனே! இங்கே அடிக்கடி குடும்பத்தோடு வருவதற்குக் கணக்குப் பார்க்கிறான்! ஆனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் (பிரச்சினை) வந்துவிட்டால் பாதிராத்திரியில் எழுந்தோடிப் போய் மருத்துவன் வீட்டுக் கதவைத் தட்டி அவன் கேட்பதை அப்படியே கொடுத்துவிட்டு வருகிறான் மகனே! குறிப்பாகச் சொன்னாலும் புரியவில்லை மகனே!” என்றாள் அன்னை

“நெருப்பைக் கண்டு எச்சரிக்கையாக இருப்பது போல் தீமைகளைக் கண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”-அம்மா


“அதிகம் ஆசைப்படுபவனே உண்மையான ஏழை “-அம்மா

“எவனொருவன் ஆதிபராசக்தி மண்ணை மிதித்து விட்டானோ அவனுக்கு ஆன்மிக ஞானம் வர ஆரம்பித்துவிட்டதென்று பொருள். அவனுக்கு அதற்கேற்ற பலன் உண்டு.
எவ்வளவுக்கெவ்வளவு ஒருவன் பொறுமையைக் கடைப்பிடிக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் உள்ளத்தில் தெளிவு ஏற்படும். அப்போது தெய்வ நிலையை உணர முடியும்."

பிரபஞ்ச ரகசியங்கள் தெரிய வேண்டுமா?

    “மகனே! தந்திக் கம்பி மேல் உட்கார்ந்திருக்கும் பறவைகட்கு அந்தக் கம்பி வழியே செல்லும் செய்தி என்ன என்று தெரியாது. அதுபோல என்மீது அமா்ந்திருக்கும் உங்களுக்கு என் மூலமாகச் செல்லும் செய்திகள் தெரியாது.

    உங்களுடைய அறியாமைக்காக இதைச் சொல்கிறேன்.
பறவைகள் செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் மனது வைத்தால் அந்த ரகசியங்கள் உங்களுக்குத் தெரியவரும்.

    ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குத் தொலைபேசிச் செய்தி சென்று கொண்டிருக்கும். ஆனால் இடையில் ஏதோ ஒரு கம்பத்தின் மீது ஏறிக்கொண்டு ஒரு சாதனத்தின் துணையுடன் ஒரு மனிதன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீா்கள்.

    அது போல, பிரபஞ்ச ரகசியங்களை உரிய சாதனத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ள முயற்சி செய்!”

பின்னோக்கிச் சென்று விட்டாய்
    

    “மகனே! உண்மையிலேயே நீ என்னுடைய நெறியைப் பின் பற்றியிருந்தால் எவ்வளவு செய்திகளை நான் தந்திருப்பேன்? முறையாகப் பயிலாததால் முறையாகக் கடைப்பிடிக்காததால் நீ 200 நூற்றாண்டுகள் பின் நோக்கிச் சென்று விட்டாய் என்பதை மறவாதே!”

    “செவ்வாடைக்கு செம்மை உண்டு .மகிமை உண்டு ஆகவே செவ்வாடை அணிந்து வருகிறவர்கள் அவற்றை சிதறடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்”.
    

    “சோதனைகள் தான் ஒரு மனிதனை அவனுக்கு அறிமுகப்படுத்துகிறது”

    “ஆசைகள் குறையக் குறைய ஆன்மா அமைதி பெறும். எதையும் தாங்கும் சக்தி பெறும்”

    "நீ செய்யும் காரியங்களின் பலனை நீ அனுபவித்துத் தான் ஆக வேண்டும்"

    "தீய எண்ணங்களையும் தீய செயல்களையும் வளரவிடக் கூடாது. கேட்கிற வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இருக்க வேண்டும்"

    “ஆன்மீக குரு அம்மாவின் அருள் எப்போதும் நமக்கு உண்டு என்ற நம்பிக்கை இருந்தால் போதும், எந்த வினையும் உன்னை அணுகாது.”

    "அன்னையை மனமுருக நினைத்து, தன் குறைகளுக்காக வேண்டி சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து மேல்மருவத்தூர் ஆலயம் வலம் வந்து அன்னையை சரணடைந்தால் நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும்"

    "இருமுடி செலுத்துவது உன்னுடைய அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே! உன் உள்ளத்தில் உள்ள அழுக்கு, உன் குடும்பத்தில் உள்ள அழுக்கு, இவ்விரண்டு அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே அந்த இருமுடி! ஒழுக்கம், கட்டுப்பாடு இன்றி நீ செலுத்தும் இருமுடியால் பயனில்லை "

..::அம்மா::..
அ- என்பது உயிர் எழுத்து
ம் – என்பது மெய் எழுத்து
மா- (ம்+ஆ) -உயிர் மெய் எழுத்து,
உயிராய் மெய்யாய் எம்முள் என்றும்
உயிர்மெய்யாய் உறைந்திருப்பவளே அம்மா !……
உன் மனம் மட்டும் தூய்மையாக இருந்துவிட்டால் எந்த வினையும் இல்லை. எந்த சூனியமும் இல்லை.

“ஓம் குருவின் திருவடியே போற்றி ஓம்”

    "பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைக்காதே, விஞ்ஞானத்தால் பணத்தையும் பொருளையும் படைக்கலாம். ஆனால் மனதுக்கு நிம்மதி. என்னிடம்தான் வரவேண்டும்"

    "கூட்டு வழிபாட்டில் கலந்து கொண்டால், பல ஊழ்வினைகள் மாறும். சக்தியருள் கிட்டும். துன்பம் நீங்கும்.    மன அமைதி கிடைக்கும்"

    "ஆன்மீக குரு அம்மாவின் அருள் எப்போதும் நமக்கு உண்டு என்ற நம்பிக்கை இருந்தால் போதும், எந்த வினையும் உன்னை அணுகாது"

    "யார் சக்தி மாலை அணிந்து இருமுடி சுமந்து 9 முறை மருவத்தூர்  வந்தால் பில்லி சூனியம் அவர்களை தாக்காது"

ஆலயத்திற்கு எப்படி வர வேண்டும்?

    "இன்னதற்கு இன்ன பலன் என்று எதையும் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆலயத்திற்கு வரக் கூடாது. அம்மா! என்ற பாச உணர்வுடன் வந்தால் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவேன்.
தேவர்களும் முனிவர்களும் முழு உடல் மூடும் அளவு புற்று வளர தவம் இருந்தும் காணப் பெறா கடவுளவள் இக்கலியுகத்தில் எமைக்காக்க மானிட ரூபத்தில் எம் கண் முன்னே எழுந்தருளி இருக்க அதை காணப்பெற்ற எம் கண்கள் என்ன புண்ணியம் செய்தனவோ"

    "இந்த மண்ணை மிதித்தாலே அதற்கு ஏற்ற பலன் உண்டு"

    "குடிப்பழக்கம் பெண்டாட்டி பிள்ளைகளை மறக்க வைப்பது     இங்குள்ள சக்திகள் குடிகார கனவனை எப்படியாவது என்னிடம் அழைத்து வாருங்கள் .என்னிடம் வந்தால் மறக்க வைப்பேன்"

    "அம்மா அருள் கொடுக்க நினைக்கிற நேரத்தில்தான் ஒருவனுக்கு சிரமத்தை கொடுக்கும்; புத்தியை மாற்றும், அப்படிப்பட்ட நேரத்தில் ஏமாந்து விடாதே! எனக்கு கட்சி வேண்டாம் சாதி வேண்டாம் உன் அருள் தான் வேண்டும் என்று இரு"    

    "உன் மனம் மட்டும் துாய்மையாக இருந்துவிட்டால் எந்த வினையும் நெருங்காது. சூனியமும் கிடையாது."

    "ஒருவனுடைய நிதானம், தெய்வ பக்தி, அவன் எப்படிப்பட்டவன் என்பதையெல்லாம் அவன் கண்களைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்"

    "நாம் பிறந்து வளர்ந்து இதுவரை யாருக்கும் என்னென்ன நன்மை செய்தோம் என்று அடிக்கடி நினைத்துப் பார்க்கும் பழக்கம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்."

    "எனக்கு நீங்கள் செய்யும் தொண்டு எதுவும் வீண் போகாது மகனே! யார் யாரெல்லாம் குடும்பத்தைவிட்டு, தொழிலை விட்டு, தொண்டு செய்கீறீர்கள் எல்லாம் அறிவேன் மகனே! நீங்கள் செய்யும் தொண்டுகளும் இந்தத் தாய்க்குத் தெரியும். உங்கள் தொல்லைகளும் தாய்க்குத் தெரியும் மகனே"
    "அம்மாவின் அருள் எப்போதும் நமக்கு உண்டு என்ற நம்பிக்கை இருந்தால் போதும் எந்த வினையும் உன்னை அணுகாது"

    "என் ஆலயத்திற்கு வந்துவிட்டாலும், வினை விதைத்தவன் வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும். திருந்தி வாழ முற்படாமல் ஆலயத்திற்கு வந்து போனால் மட்டும் போதாது…”

    "அம்மாவிடம் வந்து விட்டோம், அவள் திருவடிகளைச் சரணடைந்துவிட்டோம். எனவே முன் ஜென்ம, நிகழ்கால பாவ வினைகள் எல்லாவற்றையும் அன்னை பார்த்துக்கொள்வாள்.
எனினும் செய்த பாவவினைகளுக்கான பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும். அன்னையிடம் சரணடைவதால் அவ்வினைகளுக்கான பலன்களை நோகாமல் அனுபவிக்கச்செய்கின்றாள்.
எனவே நாம் அன்னையின் வழிகாட்டலின் படி அவள் கூறுகின்ற முறைகளைப் பின்பற்றி, புண்ணியச்செயல்களைச் செய்து பாவச் சுமைகளைக் குறைத்து ஆன்ம ஈடேற்றத்தை நாம் அடையவேண்டும்.
ஓம்சக்தி!!!"
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு ,

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை

     திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அட்சரங்களில் நான் அகரமாக உள்ளேன் என்றான் கீதையில் கண்ணன். அ என்று எழுத்துடன் வருவது அம்மா. உலகத்தில்  கெட்டா அப்பா உண்டு. கெட்ட அம்மா கிடையாது. குடும்பத்தில் உள்ள வேதனைகளையும், சோதனைகளையும் அம்மாதான் சுமக்கிறாள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய் என்பது  பழமொழி. மனிக உறவிலேயே தாய்தான் தெய்வ அன்பு காட்டுகிறாள்.  அந்த த் தாயினும் தாயாய் உயிர்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி..... திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்னும் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் பொருளை அனுபவத்தில் அன்னை ஆதிபராசக்தி எனக்குப் புரிய வைத்தாள். எனக்குத் தரிந்த குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது... சென்னை மாம்பலத்தில் ஒரு குடும்பம். நாயுடு வகுப்பைச் சேர்ந்த குடும்பம் அது.       கணவன், மனைவி, 3 பெண்கள் கொண்ட குடும்பம் அது .  ராயப்பேட்டையில்  தபால் நிலையத்தில் தபால்கார ர்கள் விடுமுறையில் சென்றால் அந்த இடத்தில் போய் வேலை செய்வார் அந்த அன்பர்.. தொட்டுக் கொள்ள துடைத்துக்கொள்ள என்ற அளவில் மட்டும் பொருளாதார  வசதி.   ஏதோ அவர்கள் வாழ்க்கை வண்டி மெதுவாக ந