முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருமுடி பற்றி அன்னையின் அருள்வாக்கு




 

இருமுடி பொருள் - விளக்கம்:

  "இருமுடி என்பதற்கு இருள்முடி என்று பொருள். இயதத்தில் உள்ள இருளைப் போக்க அணியும் முடி என்று பொருள். கணவன் மனைவி இருவரின் அகத் தோற்றத்தையும் முடி போடுவது என்று பொருள். பொருள் மற்றும் மனிதன் அகமும் புறமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையும் இருமுடி குறிக்கும்."

ஏவல், பில்லி, சூனியங்கள் தாக்காது:
   
 "இந்த மன்னில் 108 முறை அமர்ந்து தியானம் செய்பவர்களையும் இங்கே 9 முறை இருமுடி செலுத்தியவர்களையும் ஏவல் பில்லி சூனியங்கள் தாக்காது."

உன் அழகு குடும்பத்தின் அழகு:

    "இருமுடி செலுத்துவது உன்னுடைய அழுக்குகளை நீக்கி கொள்ளவே.! உன் உள்ளத்தில் உள்ள அழுக்கு, குடும்பத்தில் உள்ள அழுக்கு, இவ்விரண்டு அழுக்குகளையும் நீக்கி கொள்ளவே இந்த இருமுடி.! ஒழுக்கம், கட்டுப்பாடு இன்றி நீ செலுத்தும் இருமுடியாள் பயனில்லை."

காட்சி கொடுப்பேன்:

    "இருமுடி ஏந்திக் கொண்டு வருகின்ற சிலருக்கு காட்சி கொடுப்பேன். அந்தக் காட்சி பெற்றவருக்கு மறுபிறவி இல்லை."

எதற்காக இருமுடி?:

    "இருமுடி செலுத்துவது எனக்காக அல்ல! உனக்காக! இருமை முடி இருமுடி! ஒருமுடி உன் உள்ளத்து அழுக்குகளைப் போக்கிக் கொள்ள! ஒன்று உன் பாவம் குறைவதற்கு! மற்றொன்று உன் குடும்பத்தின் பாவம் குறைவதற்கு! அதற்காகவே இருமுடி!"

ஆன்ம பலம் பெற:

    " ஆன்ம பலம் பெற உணவைக் கட்டுப்படுத்து! மனத்தை கட்டுப்படுத்து! விரதம் இரு! பாதயாத்திரை மேற்கொள்! இங்கே எந்த மாத்திரையும் வேலை செய்யாது மகனே! சக்தி மாத்திரை தான் வேலை செய்யும்!"

தடைகளை மீறிக் கொண்டு வா:

"என்னிடம் வரமுடியாதபடி பல தடைகள் வரும். அவற்றை மீறி கொண்டு வர வேண்டும். அப்போது என் அருள் உண்டு."

துன்பங்களில் இருந்து விடுபட:

    "துன்பங்களில் இருந்து விடுபட வேண்டுமானால் காலை ஆறு மணிக்கு எழுந்து 108, 1008 படித்து முடித்து தியானம், மவுனம் கடைபிடிக்க வேண்டும். தொடர்ச்சியாக இருமுடி ஏந்தி வர வேண்டும். தாய் தந்தையாரிடம் பாசம் இருக்க வேண்டும். ஆன்மிக உணர்வினால்தான் இன்றைய கொடுமைகளை கட்டுப்படுத்த முடியும்."

இருமுடியின் ஆற்றல்:

    "அழுக்கு நிறைந்த கோணியில் தானியங்களைக் கொட்டி, அந்தக் கோணியைக் கயிற்றால் இருக்க கட்டுகிறார்கள். கோணியில் அதிகமாக உள்ள பொருட்களை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி ஒரு கயிற்றுக்கு உள்ளது. உங்கள் உள்ளம் என்னும் கோணியில் பாவங்கள் நிறைந்து மூட்டையாக உள்ளது. இருமுடி கட்டிவந்து இங்கே அவிழ்ப்பதனால் உங்கள் பாவங்கள் வெளியேற்றப்படுகின்றன. சிறிய கயிறு கோணியில் உள்ள பொருட்களை கட்டுப்படுத்துவது போல உங்கள் இருமுடியை (பாவ மூட்டைகளை) நான் கட்டுப்படுத்துகிறேன்."

    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு ,

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை

     திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அட்சரங்களில் நான் அகரமாக உள்ளேன் என்றான் கீதையில் கண்ணன். அ என்று எழுத்துடன் வருவது அம்மா. உலகத்தில்  கெட்டா அப்பா உண்டு. கெட்ட அம்மா கிடையாது. குடும்பத்தில் உள்ள வேதனைகளையும், சோதனைகளையும் அம்மாதான் சுமக்கிறாள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய் என்பது  பழமொழி. மனிக உறவிலேயே தாய்தான் தெய்வ அன்பு காட்டுகிறாள்.  அந்த த் தாயினும் தாயாய் உயிர்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி..... திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்னும் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் பொருளை அனுபவத்தில் அன்னை ஆதிபராசக்தி எனக்குப் புரிய வைத்தாள். எனக்குத் தரிந்த குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது... சென்னை மாம்பலத்தில் ஒரு குடும்பம். நாயுடு வகுப்பைச் சேர்ந்த குடும்பம் அது.       கணவன், மனைவி, 3 பெண்கள் கொண்ட குடும்பம் அது .  ராயப்பேட்டையில்  தபால் நிலையத்தில் தபால்கார ர்கள் விடுமுறையில் சென்றால் அந்த இடத்தில் போய் வேலை செய்வார் அந்த அன்பர்.. தொட்டுக் கொள்ள துடைத்துக்கொள்ள என்ற அளவில் மட்டும் பொருளாதார  வசதி.   ஏதோ அவர்கள் வாழ்க்கை வண்டி மெதுவாக ந