மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ளது ‘போற்றித் திருஅகவல்’. இதைச் சொல்லி, ஒவ்வொரு ‘போற்றி’க்கும் மலர் தூவி, சிவபெருமானை வழிபடலாம். கோயில்களில் வலம் வரும்போதோ, கிரிவலம் செய்யும்போதோ பிரதோஷ வழிபாட்டின் போதோ இந்த போற்றித் திரு அகவலைச் சொல்லி, சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம்! திருநாளன்று அண்ணாமலையைக் கிரிவலம் வரும்போதும் வீட்டில் வழிபடும்போதும் துதிக்கும் வகையில் போற்றித் திருஅகவலில் உள்ள நாமப் போற்றிகள் தொகுப்பு உங்களுக்காக! ‘போற்றித் திருஅகவல்’ தாயே யாகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதிய னாகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றி தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக் காரமு தானாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின்ஆர் உருவ விகிர்தா போற்றி கல்நார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா என்றனக் கருளாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரைசே போற்றி அமுதே போற்றி விரைசேர் சரண விகிர்தா போ...
இந்த வலைப்பூ ஆன்மிகத்தையும் அம்மாவின் அற்புதங்களையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தொடங்கப்பட்டுள்ளது....